பெண்கள் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்து அணி அபார பந்துவீச்சு..! இந்தியா 80 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


பெண்கள் டி20 கிரிக்கெட்;  இங்கிலாந்து அணி அபார பந்துவீச்சு..! இந்தியா 80 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது .இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி , முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமலும் , ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும் எடுத்து வெளியேறினர் . பின்னர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . விக்கெட்டுகள் இழந்தாலும் ஒரு புறம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். அவர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 16.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆட்டமிழந்தது . இங்கிலாந்து சார்பில் சார்லி டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர் .


Next Story