தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு


தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு உற்சாக வரவேற்பு
x

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வென்ற அணியினர் இன்று தமிழகம் திரும்பினர்.

வெற்றிக் கோப்பையுடன் வந்த அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீராங்கனைகளை வரவேற்று உற்சாகப்படுத்தும் வகையில் ரெயில் நிலையத்தில் மேளதாளங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும், வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்து இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story