U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்


U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கிளிப்போர்டு மிரான்டா நியமனம்
x

U23 இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கிளிப்போர்டு மிரான்டா நியமிக்கப்பட்டுள்ளார். மிரான்டா 2005 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அவரது பயிற்சியின் கீழ் ஒடிசா எப்.சி. அணி கேரளாவில் நடந்த சூப்பர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story