ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி
x

Image Courtesy : Twitter @bengalurufc

பெங்களூரு அணி ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸாண்டர் ஜோவனோவிச்சை ஒரு சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

பெங்களூரு,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பெங்களூரு அணி ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸாண்டர் ஜோவனோவிச்சை ஒரு சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதாகும் சிறந்த டிபென்டரான இவர் 6 நாடுகளில் உள்ள கிளப் அணிகளுக்கு விளையாடி அனுபவம் உள்ளவர்.

பெங்களூரு எப்சி அணிக்கு தேர்வாகியது குறித்து அலெக்ஸாண்டர் ஜோவனோவிச் கூறுகையில், "பெங்களூரு அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அணியின் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கு அணியில் நண்பர்கள் இருப்பதால், கிளப்பைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெங்களூரு அணிக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story