கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக 700 கோல்கள்: ரொனால்டோ புதிய சாதனை


கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக 700 கோல்கள்: ரொனால்டோ புதிய சாதனை
x

Image Courtesy: AFP 

நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் எவர்டன் அணிக்கு எதிராக ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

லண்டன்,

போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியில் விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்தாட்ட உலகிலேயே அதிக கோல்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

37 வயதான அவர் வசம் நிறைய சாதனைகள் உள்ளன. போர்ச்சுகல் அணிக்காக அவர் மொத்தம் 117 கோல்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் எவர்டன் அணிக்கு எதிராக ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார். இது கிளப் அணிக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆக அமைந்துள்ளது.

கால்பந்து வரலாற்றில் இது மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ரொனால்டோவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங் போன்ற பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story