தூரந்த் கோப்பை கால்பந்து: கால்இறுதியில் சென்னை அணி தோல்வி


தூரந்த் கோப்பை கால்பந்து: கால்இறுதியில் சென்னை அணி தோல்வி
x

image courtesy: Durand Cup twitter

தூரந்த் கோப்பை கால்பந்து கால்இறுதி போட்டியில் மும்பை சிட்டி அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

கொல்கத்தா,

131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில், மும்பை சிட்டி அணி 5-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

வழக்கமான நேரத்தில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் கூடுதல் நேரத்தில் மும்பை அணி வெற்றியை வசப்படுத்தியது. மும்பை வீரர் கிரேக் ஸ்டூவர்ட் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.


Next Story