ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி.யை எதிர்கொண்டது.

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி.யை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் ரபேல் ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலும் ஜோர்டான் ஆட்டத்தின் 50-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

பெங்களூரு அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story