ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு, மும்பை சிட்டி அணிகள் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு, மும்பை சிட்டி அணிகள் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் மாலை 5.00 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் ஜாவி ஹெர்னாண்டஸ் ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story