ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னையின் எப்.சி அணி சார்பில் பரூக் சவுத்ரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலும் மீடெய் ஆட்டத்தின் 40-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் லால்டின்புயா ஆட்டத்தின் 45+4-வது நிமிடத்திலும் டேனியல் ஆட்டத்தின் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தன. இதையடுத்து சென்னையின் எப்.சி-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story