ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியுடன் மோதுகிறது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியுடன் மோதுகிறது.

தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருக்கும் சென்னையின் எப்.சி. அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன், முதல் 2 ஆட்டங்களில் வெற்றியை ருசித்துள்ள மோகன் பகானை வீழ்த்த வரிந்து கட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாலை 5.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.


Next Story