ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் உள்ளூர் , வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தேர்வாகும்.

இந்த நிலையில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்தது.

இந்த சீசனில் பஞ்சாப் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். இதுவரை 11 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி ஒரு வெற்றி, 5 டிரா, 5 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.


Next Story