ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் டேனியல் ஆட்டத்தின் 11-வது நிமிடத்திலும் முகமது சனான் ஆட்டத்தின் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஜெரெமி ஆட்டத்தின் 83 மற்றும் 86-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

பஞ்சாப் எப்.சி. அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story