ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
x

image courtesy: Chennaiyin F.C. twitter

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியுடன் மோதியது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் திமித்ரி (22-வது நிமிடம்), ஜேசன் கம்மிங்ஸ் (45+3-வது நிமிடம்), மன்விர் சிங் (56-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் ரபேல் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story