ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மும்பை சிட்டி அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி சார்பில் சாங்டே ஆட்டத்தின் 52-வது நிமிடத்திலும் விக்ரம் பர்தாப் சிங் ஆட்டத்தின் 80-வது நிமிடத்திலும் குர்கிராத் சிங் ஆட்டத்தின் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

சென்னையின் எப்.சி. அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story