ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி
x

iamge courtesy: Mumbai City FC twitter

மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-பஞ்சாப் எப்சி அணிகள் மோதின.

மும்பை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-பஞ்சாப் எப்சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் லூகா ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் ஜார்ஜ் மற்றும் கிரெக் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story