ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி..!
x

Image Courtesy: @IndSuperLeague

மும்பை - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

அதில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது.


Next Story