ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

தினத்தந்தி 31 March 2024 4:10 PM GMT (Updated: 31 March 2024 9:59 PM GMT)

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் ஜோனி கவுகோ ஆட்டத்தின் 29-வது நிமிடத்திலும், திமித்ரி 90+4-வது நிமிடத்திலும், தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் ஜோர்டான் முர்ரே ஆட்டத்தின் 72-வது நிமிடத்திலும், ரியான் எட்வர்ட்ஸ் 80-வது நிமிடத்திலும், இர்பான் 90+7-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story