ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு - ஒடிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு - ஒடிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 15 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.

இந்த தொடரில் இன்று மாலை 5 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story