ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

புவனேஸ்வர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஒடிசா அணி மேலும் 2 கோல் அடித்து அசத்தியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அபார வெற்றி பெற்றது.


Next Story