ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று ஓய்வு நாள்


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று ஓய்வு நாள்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 27 Dec 2022 12:00 AM GMT (Updated: 27 Dec 2022 12:45 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

கொச்சி,

11 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொச்சியில் அரங்கேறிய ஆட்டம் ஒன்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

86-வது நிமிடத்தில் கேரள வீரர் சந்தீப் கோல் அடித்தார். இதன் மூலம் 7 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி என்று 22 புள்ளிகளுடன் கேரள அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.


Next Story