பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லயோனல் மெஸ்சி


பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லயோனல் மெஸ்சி
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 4 Jun 2023 11:35 AM GMT (Updated: 4 Jun 2023 11:38 AM GMT)

கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார்

பாரீஸ்,

கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டன் 35 வயதான லயோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் . அண்மையில் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதிஅரேபியாவுக்கு சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலகியுள்ளார் . மெஸ்ஸி கிளர்மோன்டுக்கு எதிரான ஆட்டமே பி.எஸ்.ஜி.-க்காக அவர் விளையாடப் போகும் கடைசி போட்டி என தெரிவிக்கப்பட்டது .

இந்த நிலையில், இன்று ஆடிய கிளெர்மோன்ட் அணிக்கு எதிரான கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார்.

மெஸ்சி இந்த கிளப்புக்காக இதுவரை 75 ஆட்டங்களில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார். இந்த கிளப்புக்காக 2 பிரெஞ்சு சாம்பியன்ஷிப் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.


Next Story