கூடைப்பந்தாட்ட போட்டி: திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவிகள் சாதனை


கூடைப்பந்தாட்ட போட்டி: திண்டுக்கல் மாவட்ட  பள்ளி மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 4 Jan 2022 11:28 AM GMT (Updated: 4 Jan 2022 11:28 AM GMT)

மாநில அளவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 3-ஆம் இடம் பிடித்து பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற 16-வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

துாத்துக்குடியில் சென்ற மாதம் டிச.26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 5 நாட்கள் மாநிலஅளவில் 16-வயதுக்குட்பட்டோருக்காக பள்ளிகளுக் கிடையேயான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சென்னை, ஈரோடு, துாத்துக்குடி, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 13 அணிகள் பங்கேற்றன. 

இப்போட்டியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி கூடைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடி மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர். இம்மாணவிகளை பள்ளி தலைவர் பிரசன்னா, செயலர் கோபி மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டி பரிசு வழங்கினர். இந்நிகழ்சியில் பயிற்சியாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story