ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை 3வது சுற்றுக்கு முன்னேற்றம்..!


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை 3வது சுற்றுக்கு முன்னேற்றம்..!
x

Image Tweet : @AITA__Tennis

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் - எட்வர்ட் வின்டர் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா இணை ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் - எட்வர்ட் வின்டர் இணையை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.


Next Story