துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ்; அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி


துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ்; அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி
x

image courtesy; AFP

அரினா சபலென்கா 31-ம் நிலைவீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார்.

துபாய்,

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துயாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலைவீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோனா வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அரினா சபலெங்காவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-1, 5-7, 6-2 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸை வீழ்த்தினார்.


Next Story