பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!
x

image courtesy: Roland-Garros twitter via ANI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றில் வெற்றி பெற்று அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ரபேல் நடால் கால்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் 4-வது சுற்றில் வெற்றி பெற்று கால்இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

நேற்று நடைபெற்ற 4-வது சுற்று போட்டியில் 13 முறை சாம்பியனும் ஸ்பெயின் வீரருமான ரபேல் நடால், கனடாவைச் சேர்ந்த பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நடால் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் பெலிக்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் வீரர் பெர்னாப் ஜபாடா மிரல்லஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் ஸ்வெரெவ், 7-6 (13-11), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜபாடாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் கால்இறுதி போட்டியில் நடால், நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சுடன் மோத இருக்கிறார். ஸ்வெரெவ், கார்லஸ் அல்காரசுடன் மோதுகிறார்.


Next Story