மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி தகுதி


மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி தகுதி
x

அரைஇறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா(இந்தியா)-மேத்யூ எப்டென்(ஆஸ்திரேலியா) ஜோடி வெற்றி பெற்றது.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 7-6 (7-3), 10-4 என்ற செட் கணக்கில் சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)-ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

அதே போல் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 9-வது இடத்தில் உள்ள மரியா சக்காரியை (கிரீஸ்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Next Story