மல்லோர்கா ஓபன் : சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..! தொடரிலிருந்து வெளியேறினார்


மல்லோர்கா ஓபன் : சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..! தொடரிலிருந்து வெளியேறினார்
x

Image Courtesy : AFP 

யானிக் ஹான்ப்மேன் 6-4, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனை எதிர்கொண்டார்.

முதல் சுற்றை 4-6 என சிட்சிபாஸ் இழந்த போதிலும், 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ஹான்ப்மேன் அபாரமாக விளையாடினார். அதனால் 2-6 என 3-வது செட்டில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

யானிக் ஹான்ப்மேன் 6-4, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story