கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் பிரகாஷ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும். நகர்புறத்திலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். 55 வயதை கடந்த அனைத்து முதியோர்களுக்கும், ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story