ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி - நாளை தொடக்கம்


ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி - நாளை தொடக்கம்
x

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டென்னிஸ் கழக தலைமை செயல் அலுவலர் ஹிதேன் ஜோஷி, நாளை முதல் 9-ந்தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த தொடரில் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி ஏப்ரல் 8-ந்தேதியும், அதனைத் தொடர்ந்து ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி 9-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story