தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மராட்டிய அணி மீண்டும் 'சாம்பியன்'


தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மராட்டிய அணி மீண்டும் சாம்பியன்
x

84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி (17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலையில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அணிகளுக்கான அரைஇறுதி ஆட்டங்களில் மராட்டியம் 3-2 என்ற கணக்கில் கர்நாடகாவையும், அரியானா 3-1 என்ற கணக்கில் மேற்கு வங்காளத்தையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரவில் நடந்த இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-அரியானா அணிகள் மல்லுக்கட்டின. விறுவிறுப்பான இந்த மோதலில் மராட்டிய அணி 3-1 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மராட்டிய அணியில் தனிஷா இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும், சயாலி வாணி மற்றொரு ஆட்டத்திலும் வெற்றியை தேடித்தந்தனர். அரியானா அணியில் சுஹானா சைனி 11-9, 11-2, 11-6 என்ற நேர் செட்டில் ஜெனிபர் வர்கீசை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றார்.


Next Story