அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினா வெளியேற்றம்

Image Courtesy : @usopen twitter
ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டி, முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினாவை வீழ்த்தினார்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினா, ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டியுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6(6)-7, 6-4 என்ற கணக்கில் எலினா ரைபாகினாவை வீழ்த்தி சொரானா கிறிஸ்டி வெற்றி பெற்றார். இந்த தோல்வியால் கடந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான எலினா, அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டி, முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினாவை வீழ்த்தினார்.
Related Tags :
Next Story