விம்பிள்டன் போட்டியில் தோல்வி- சானியா மிர்சா உருக்கமான பதிவு


விம்பிள்டன் போட்டியில் தோல்வி-  சானியா மிர்சா உருக்கமான பதிவு
x

தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து விடைபெறுவதை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது இதனால் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி விம்பிள்டன் தொடரிலிருந்து வெளியேறியது .

இந்நிலையில், தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து விடைபெறுவதை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்சா அந்த பதிவில் ;

விளையாட்டு உங்களிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது. மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக.. வெற்றி தோல்விகள்.. மணிக்கணக்கான கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லாத இரவுகள் ? ஆனால் பிற வேலைகள் கொடுக்க முடியாத பலனைத் இது உங்களுக்குத் தருகிறது. அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ? கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி , சண்டை மற்றும் போராட்டம் ..

நாம் செய்த உழைப்பு அனைத்தும் இறுதியில் மதிப்புக்குரியது .. இந்த முறை விம்பிள்டன் எனக்கானது இல்லை என்று நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக இங்கு விளையாடி வெற்றி பெறுவது பெருமையாக உள்ளது .. நான் உன்னை இழக்கிறேன் .என பதிவிட்டுள்ளார்.


Next Story