விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலினா ரைபகினா


விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலினா ரைபகினா
x
தினத்தந்தி 9 July 2022 3:15 PM GMT (Updated: 9 July 2022 3:22 PM GMT)

இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா ஆகியோர் மோதினர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய எலினா ரைபகினா 3-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.மேலும் இது எலினா ரைபகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் ஆகும்


Next Story