மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய முர்ரே- காலிறுதிக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்
Image Courtesy : AFPஇன்றைய போட்டி நடைப்பெறாமலே நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் தரவரசையில் 78-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நோவக் ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை நடத்த இருந்தார்.
முன்னாள் நம்பர் 1 வீரரான ஆண்டி முர்ரே - தற்போது நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் உடன் மோதுவதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக மோதும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இன்று போட்டி தொடங்குவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக முர்ரே இந்த போட்டியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.
இதனால் போட்டி நடைப்பெறாமலே நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story






