ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு

ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.

Update: 2019-07-11 09:00 GMT
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலோ எடையுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அதனை பிடித்தனர்.  பின்னர் முறைப்படி அதன் நீளம் மற்றும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது.  இதன்பின்னர் பத்திரமாக அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்