மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!

மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2019-12-14 06:21 GMT
மும்பை

மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பல்கார் மாவட்டத்தில்  இன்று காலை  5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3.9 ஆக பதிவானது.  தஹானு தாலுகாவில் உள்ள  துண்டல்வாடி என்ற கிராமத்தில்  வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்தே 2 முறை லேசான நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 12.26 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், 3.4  ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் இரவு 9.55 மணியளவில் ஏற்பட்டு உள்ளது.

 எனினும் இந்த நிலநடுக்கங்களால் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே இந்த கிராமத்தில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஹானு தாலுகா கடந்த ஒரு வருடமாக இத்தகைய அதிர்வலைகளை அனுபவித்து வருகிறது, அவர்களில் பெரும்பாலோர் துண்டல்வாடி கிராமத்தை மையமாகக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்