உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
பிரோசாபாத்,
உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் இருந்து லக்னோ செல்லும் விரைவுசாலையில் தனியார் பேருந்து ஒன்று டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள மோதிஹரி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த பேருந்து இரவு 10 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்றின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். 31 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் இடாவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி அறிந்த முதல் மந்திரி ஆதித்யநாத் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும், காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.