மாஸ்க், ஸ்மார்ட் கார்டு கட்டாயம்: டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது.

Update: 2020-08-30 08:01 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவது கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிகப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம்  7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி,  மெட்ரோ ரெயில் சேவைகளை துவங்க டெல்லி அரசு தயாராகி வருகிறது. 

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,” பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஸ்மார்ட் கார்டு மூலமே பயணம் செய்ய அனுமதி உண்டு. டோக்கன்கள் கிடையாது. ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேருக்கு அனுமதி உண்டு என்பதை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. மெட்ரோ ரெயில்களில் ஏசி இயக்கப்படாது” போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. 

இந்த தகவல்களை டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் தெரிவித்தார். மேலும், அவர் கூறும் போது, “ மெட்ரோ ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்காது. குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடுமையாக பின்பற்றப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்