ஆந்திராவில் பேருந்து -லாரி மோதி பயங்கர விபத்து: 13 பேர் பலி

ஆந்திராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 13 பேர் பலியாகினர்.

Update: 2021-02-14 02:50 GMT
கர்னூல்,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ள மதர்பூர் என்ற கிராமத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 13 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

 காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்