கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் மேலும் 4,070- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,070-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 4,345- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,71, 975- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 15- பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,089- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 58 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.