நாடு முழுவதும் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 103.48 கோடி

நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-26 19:55 GMT

புதுடெல்லி,


நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 - 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணை 41,10,37,440 மற்றும் இரண்டாம் தவணை 13,11,13,078 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  45 - 59 வயதுஉடையவர்களுக்கு முதல் தவணை 17,29,26,403 மற்றும் இரண்டாம் தவணை 9,27,40,536 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

60 வயதுக்கு மேல் முதல் தவணை 10,86,06,993 மற்றும் இரண்டாம் தவணை 6,47,03,420 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்