காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் - உமர் அப்துல்லா

பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை... கோபத்தால் காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் என்று உமர் அப்துல்லா கூறினார்.

Update: 2021-11-29 08:14 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா நேற்று காஷ்மீரின் கிஷ்ட்வர் மாவட்டத்திற்கு சென்றார். 

அம்மாவட்டத்தின் டோடா பகுதியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா பங்கேற்றார். 

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உமர் அப்துல்லா, எங்கள் ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் துடைத்து எறியப்பட்ட இடங்களில் மீண்டும் பயங்கரவாதம் வளருகிறது. இந்த பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை. கோபம் மற்றும் பிற காரணங்களால் ஆயுதங்களை எடுக்க தயாரக உள்ள காஷ்மீர் இளைஞர்களே பயங்கரவாதிகளாக வருகின்றனர்’ என்றார்.

மேலும் செய்திகள்