மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Update: 2023-11-03 17:27 GMT

அமராவதி,

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு 'மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, 53 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து அவர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக சந்திரபாபு நாயுடு நேற்று கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, அவர் இன்று வீடு திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்