இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கு அதிகாரமளிப்பது அவசியம் - பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களின் முன்னேற்றம் என்பது அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-06-18 10:54 GMT

வடோதரா,

இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களின் முன்னேற்றம் என்பது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் பழங்குடியினப் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்ட 21 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைவதற்கு பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களின் முன்னேற்றம் என்பது அவசியம்.

குஜராத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இரட்டை எஞ்ஜின் போல செயல்பட்டு வருகிறது. தற்போது ராணுவம் முதல் சுரங்க தொழில்கள் என அனைத்திலும் பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டே கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன.

இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். எனது அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதனால் தற்போது அவர்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்ய முடியும். அதற்கான அனைத்து கதவுகளும் அவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்