உப்பள்ளியில்வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து

உப்பள்ளியில் வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-25 18:45 GMT

உப்பள்ளி

தொழிலாளி

தார்வார் மாவட்டம் பழைய உப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது35) தொழிலாளி. இவரது மனைவி சவீதா. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் மஞ்சுநாத் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மஞ்சுநாத் சவீதாவிடம் கூடுதல் வரதட்சணை பெற்றோரிடம் வாங்கிவிட்டு வரும்படி கூறி வந்தார்.இதனால் மஞ்சுநாத் மற்றும் சவீதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று

முன்தினம் இரவு மதுகுடித்துவிட்டு மஞ்சுநாத் வீட்டிற்கு வந்தார். அப்போது மஞ்சுநாத் கூடுதல் வரதட்சணை கேட்டு சவீதாவிடம் வாக்குவாதம் செய்தார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த மஞ்சுநாத் சவீதாவை சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். அவர்கள் மஞ்சுநாத், சவீதாவை சமாதானம் செய்து வைத்தனர்.

கத்திக்குத்து

இந்தநிலையில் சவீதா போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில், மஞ்சுநாத் சவீதாவை தேடி சென்றார். அப்போது அந்த வழியாக நடந்து

சென்ற அவரை மஞ்சுநாத் வழிமறித்தார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சவீதாவை அவர் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சவீதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறையில் அடைப்பு

மேலும் தப்பியோடிய மஞ்சுநாத்தை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பழைய உப்பள்ளி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்