மத்திய பிரதேசம்: தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-03-23 16:12 GMT

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென தேனீக்கள் கூட்டம் அவர்களை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

இதில் 5 தொழிலாளர்களுக்கு தேனீக்கள் கொட்டியதால் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்ற 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்