தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Update: 2023-08-04 09:56 GMT

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த மந்திரி பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

மக்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. மீண்டும் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்