விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

தொடர் விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-22 09:00 GMT

சென்னை,

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணித்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், ஆயுதபூஜை, விஜய தசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகள் உடன் சேர்த்து 813 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இவற்றில் 3 லட்சத்து 92 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்