பீகாரில் காட்டுப்பகுதியில் 612 வெடிகுண்டுகள் பறிமுதல் - மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிரடி

பீகாரில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் 612 வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேற்ய் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2022-07-13 20:12 GMT

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தின் கயா மாவட்ட காட்டுப் பகுதியில் நக்சலைட்டு எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'கோப்ரா' கமாண்டோ பிரிவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர்.

அப்போது 612 வெடிகுண்டுகள், 250 சுற்று வெடிமருந்துகள், 495 டெட்டனேட்டர்கள், ஒரு ஏ.கே. வகை துப்பாக்கி ஆகியவை கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்