கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-07-19 18:45 GMT

பட்டாசு வெடித்தார்

கடலூர் புதுப்பாளையம் ஆர்.பி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). கொத்தனார். இவர் கடந்த 14.11.2020 அன்று தனது மனைவி ராஜேஸ்வரியுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் அதேபகுதியில் உள்ள பொது கழிப்பறை வழியாக சென்ற போது, அங்கு புதுப்பாளையம் முத்துக்குமரன் நகரை சேர்ந்த அஞ்சாபுலி மகன் ராதாகிருஷ்ணன் (22) என்பவர் தனது நண்பர்களுடன் நடுரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணனிடம் ஏன்? ரோட்டை வழிமறித்து பட்டாசு வெடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை

அதற்கு கிருஷ்ணமூர்த்தியை, ராதாகிருஷ்ணன் ஆபாசமாக திட்டி தாக்கினார். மேலும் காலால் எட்டி அவரது நெஞ்சில் உதைத்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்ததில், அவரது பின்பக்க தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் கோமாவுக்கு சென்று இறந்து விட்டார்.

இது பற்றி ராஜேஸ்வரி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி பிரகாஷ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர், தனது தீர்ப்பில் இவ்வழக்கில் ராதாகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்